சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என கூறி மோசடி செய்த நபர் கைது
Prathees
1 year ago
வவுனியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என போலியாக காட்டி நீல மாணிக்ககல்லை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவரை லக்கல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வாரியபொலஇ மினுவாங்கேட் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் பல தொலைக்காட்சி நாடகங்களில் பொலிஸ் வேடங்களில் நடித்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடமிருந்த நீலமாணிக்கக்கல் மற்றும் சொகுசு காரும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.