271 பேரின் உயிரை எடுத்த இந்தோனேஷியா நிலநடுக்கம் மீட்பு பணிகள் அதிக மழையால் இடைநிறுத்தம்

#Indonesia #Earthquake
Prasu
1 year ago
271 பேரின் உயிரை எடுத்த இந்தோனேஷியா நிலநடுக்கம் மீட்பு பணிகள் அதிக மழையால் இடைநிறுத்தம்

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட ஏராளாமன கட்டிங்கள் இடிந்து விழுந்தன. 

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள். மேலும் 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 

இன்றைய மீட்பு பணியின்போது 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 வயது சிறுவன் மீட்கப்பட்டான். வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய அந்த சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டிருக்கிறான். 

இந்நிலையில் சியாஞ்சூர் பகுதியில் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக கனமழை பெய்து வருவதால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இன்று மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. 

மீட்கப்பட்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 2000க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதனால் ஜாவா தீவின் அருகில் உள் மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. பலருக்கு படுக்கை வசதி கிடைக்காத நிலையில், ஸ்டிரெச்சரில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

ஜனாதிபதி ஜோகோ விடோடோ நேற்று சியாஞ்சூருக்கு சென்று நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். சிதைந்துபோன அப்பகுதியில் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதாகவும், வீடு சேதமடைந்த ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் 50 மில்லியன் ரூபியா (3,180 டாலர்கள்) வரை உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!