துமிந்த சில்வாவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராக கோட்டாபய ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Prasu
1 year ago
துமிந்த சில்வாவின் பொது மன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இணைத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு உர்து பெர்னாண்டோ யசந்த கோதாகொட தலைமையிலான உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது