வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பெண்கள் கைது
Kanimoli
1 year ago
வவுனியா நகர்ப்பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா காவல்துறையின் போதை ஒழிப்பு பிரிவினர் நேற்று(24) மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறைக்கு கிடைத்த விசேட தகவலுக்கமைய இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் செட்டிகுளம், கிளிநொச்சி, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.