பல்கலைக்கழக அனுமதி குறித்த விசேட அறிவிப்பு ஒன்றை பாராளுமன்றத்தில் அறிவித்த கல்வி அமைச்சர்!

Mayoorikka
1 year ago
பல்கலைக்கழக அனுமதி குறித்த விசேட அறிவிப்பு ஒன்றை பாராளுமன்றத்தில் அறிவித்த கல்வி அமைச்சர்!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், எதிர்வரும் 3 வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த;

 2023 ஆம் ஆண்டில், நாங்கள் விடுமுறைக் காலத்தைக் குறைத்து, பாடசாலை நேரத்தை அதிகரிக்கவும், அந்த ஆண்டில் பாடத்திட்டத்தை முடிக்கவும் முயற்சிக்கிறோம், அது நடந்தால், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளை அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல முடியும். வெட்டு மதிப்பெண்கள்  இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் பல்கலைக்கழக நுழைவுக்கு வழங்கப்படும். 

இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியினை நீக்குவதற்கான பத்திரம் எதிர்வரும் 28 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!