அடுத்த ஆண்டும் மின்சாரம் துண்டிக்கப்படுமா?: எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்
Mayoorikka
1 year ago
நாட்டின் 90 சதவீதமான மின்சாரம் மற்றும் எரிசக்தி நெருக்கடி அடுத்த வருடத்திற்குள் தீர்க்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செலவுத் தொடர்பான வரவுசெலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் அளந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாடும் அமைச்சரினால் விமர்சிக்கப்பட்டது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்களின் செலவின தலையீடுகள் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இரவு 07.00 மணி வரை நடைபெறவுள்ளது.