பருத்தித்துறையில் மாவீரர்களது பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

Mayoorikka
3 years ago
பருத்தித்துறையில் மாவீரர்களது பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் பருத்தித்துறை - நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரா் நினைவு மண்டபத்தில் நேற்று (25) மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

3 மாவீரா்களின் தாய் ஒருவா் மாவீரா்களுக்கான பொதுச் சுடரினை  ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியதை தொடா்ந்து, அஞ்சலி நடைபெற்றது. 

அதனை தொடா்ந்து மாவீரா்களின் பெற்றோா்கள் கௌரவிக்கப்பட்டு மரக்கன்றுகள், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் நினைவு மண்டபத்தை சூழ புலனாய்வாளா்கள் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4