புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Kanimoli
3 years ago
புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படமாட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களின் வருகைப் பதிவுகளை கொண்ட முறைமை ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக இந்த முறைமை செயற்படுத்தப்பட உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4