கண்ணீரால் நனைந்த தமிழர் தாயகப் பகுதிகள்: தலைமுறை தாண்டி திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்: மிக எழுச்சியுடன் நினைவேந்தல் (படங்கள் )
தலைமுறை தாண்டி பெருந்திரளான மக்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மிக எழுச்சியுடன் தமது கண்ணீர் காணிக்கைகளை செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வடக்கு கிழக்கில் இம்முறை 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
அந்த இடங்களில் மாவீரர் பெற்றோர்கள் - உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட ஏராளமான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
முதல் மாவீரரான லெப்டினட் சங்கர் எனப்படும் சத்தியநாதனின் உயிர்ஈகம் செய்யப்பட்ட தாயக நேரம் மாலை 6 . 05இற்கு ஈகைச்சுடர் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் ஏற்றப்பட்டது.
வழமைபோலவே இராணுவத்தினரின் அடாவடிகளும் ஒடுக்குமுறைகளும் ஆங்காங்கே இடம்பெற்ற போதிலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி மக்கள் தமது தேசிய கடமையை நிறைவேற்றியிருந்தனர்.
அனைத்து துயிலும் இல்லங்களிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்க விடப்பட்டு ஈகைச் சுடரேற்றி தாயாக விடுதலைக்காக தம் இன்னுயிரை மாய்த்த வீரர்களுக்கு மக்கள் அஞ்சலிகளை செலுத்தினர்.