படிப்புகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற அரச அதிகாரிகள் தப்பியோட்டம்!
Reha
1 year ago
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் பல்வேறு படிப்புகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் 9 அதிகாரிகள் பணிக்குத் திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய சேவைக் காலத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மீறியதன் காரணமாக அந்த அதிகாரிகளிடம் இருந்து ஒரு கோடியே எழுபத்தி இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான ரூபா அபராதமாக அறவிடப்படும் எனவும், ஆனால் இதுவரை அந்தத் தொகை அறவிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கணக்காய்வு அலுவலகம் அந்தத் அதிகாரிகளுக்கு நிறுவனக் குறியீட்டின் விதிகளின்படி தொடரவும், பணத்தை மீட்டெடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.