FV நீல் மேரி படகில் தொழிலுக்கு சென்ற 4இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரால் மீட்பு
எஃப்.வி. நீல் மேரி என்ற படகில் 2022 செப்டம்பர் 25 ஆம் திகதி, தொழிலுக்கு சென்ற நான்கு இலங்கை மீனவர்கள், தொடர்பை இழந்த நிலையில், இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவர்கள் மீன் பிடிப்பதற்காக கிழக்கு திசை நோக்கிப் பயணித்தபோதே தொடர்பை இழந்தனர்.
இந்தநிலையில் இறுதியில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அடைந்துள்ளனர்.
அங்கு இந்திய கடலோர காவல்படை அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அளித்து அவர்களை இந்திய கடற்கரைக்கு கொண்டு வந்தது.
அவர்கள் இப்போது இந்திய அதிகாரிகளால் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவதை விரைவுபடுத்துவதற்காக இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியால் 63 நாட்களாக கடலில் மாயமான இலங்கை மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்ததுடன், குடும்பம் ஒன்று கூடும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர் என இந்திய தரப்பு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.



