4 மருத்துவர்களின் சம்பள மோசடி வழக்கு - அபராதம் கட்ட முடியாது என்று கூறிய குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சம்பளப் பிரிவில் உதவி முகாமையாளராக கடமையாற்றிய நான்கு வைத்தியர்களின் சம்பளத்தை தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்து இரண்டு முறை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா நேற்று (5) உத்தரவிட்டார்.
மேலும் மோசடி செய்த தொகையை விட மூன்று மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணையின் போதுஇ தொடர்புடைய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட பின்னர். குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரதிவாதி ஒரு கோடியே அறுபத்தாறாயிரத்து எழுநூற்று எழுபது ருபாய் 45 சதம் தொகையை செலுத்த முடியாது என திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.
அதன்படி 6 வருட கடூழிய சிறைத்தண்டனையும் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
2003ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த மோசடியில் தனது கட்சிக்காரர் மாத்திரமன்றி ஏனையவர்களும் சம்பந்தப்பட்டிருந்தாலும். சட்டமா அதிபர் இந்த பிரதிவாதிக்கு மாத்திரமே வழக்குத் தொடுத்துள்ளார் என டபிள்யூ. டபிள்யூ. நிஷான் கிரிஷாந்த பெர்னாண்டோ என்ற பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக விஜேவர்தன நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.