நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை
Prabha Praneetha
2 years ago

திருகோணமலைக்கு வடகிழக்கே 320 கி.மீ தொலைவிலுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து , இன்று மாலை சூறாவளியாக படிப்படியாக வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



