7 தொடக்கம் 8 மணிநேர மின்வெட்டு மற்றும் கட்டண அதிகரிப்பு
Prabha Praneetha
2 years ago
7 தொடக்கம் 8 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என்ற அச்சத்தை பரப்பி கட்டணத்தை அதிகரிக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தயாராகி வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கணக்கீடுகள் சரியானவையல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சந்தர்ப்பத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை.
12 முறைமைகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணம் தொடர்பில் இலங்கை மின்சார சபை கணக்கிட்டுள்ளது.