காணித் தகராறு காரணமாக 74 வயதான மனைவியை மண்வெட்டியால் தாக்கிக் கொன்ற கணவன்
Prasu
2 years ago

தலங்கம பிரதேசத்தில் காணித் தகராறு காரணமாக 74 வயதான பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண்ணுடன் ஏற்பட்ட காணி தகராறு காரணமாகவே அவரது கணவரே மண்வெட்டியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.



