இந்திய - சீன துருப்புக்கள் எல்லையில் மோதலை ஆரம்பித்துள்ளனர்.
#world_news
#India
#China
Mugunthan Mugunthan
2 years ago

எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனப் படைகளுடன் தனது படைகள் மோதலில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா கூறுகிறது, இது ஒரு வருடத்திற்கு பின்னரானமுதல் வெடிப்பு.
2020 இல் ஒரு பெரிய மோதலில் குறைந்தது 24 துருப்புக்கள் கொல்லப்பட்டதிலிருந்து பதட்டங்களைத் தணிக்க நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் திங்களன்று, இந்தியாவின் கிழக்கு முனையான அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங் செக்டாரில் கடந்த வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் கூறியது.
இதில் இரு தரப்பினரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவித்தனர் சில ராணுவ வீரர்கள்.
இதில் குறைந்தது ஆறு இந்திய துருப்புக்கள் காயமடைந்ததாக இந்திய இராணுவ வட்டாரம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.



