பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் கணவன் மனைவி கைது

Kanimoli
3 years ago
பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் கணவன் மனைவி கைது

  யாழ்ப்பாணம் வளலாய் பகுதியில் உள்ள கடை ஒன்றினை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் குறித்த பகுதியில் கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உடைக்கப்பட்டு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தம்பதிகளை கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைதானவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டது. மேலும் கணவன் மனைவி இருவரையும் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4