பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.... பாகம் - 03

#spiritual #God #Pillaiyar
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.... பாகம் - 03
  1. பிள்ளையார் நிவேதனம் என்ன தெரியுமா? கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு. வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை என்பனவாகும்.
     
  2. விநாயகர் விரதமான சதுர்த்தியன்று நம் கட்டை விரலின் பன்னிரண்டு மடங்கு அளவில் மண்சிலை வைத்து வழிபடுவர்.
     
  3. பொதுவாக புரட்டாசி மாதம் சதுர்த்தி வரையில் புஜையில் இது இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் புஜைகளை முறையாகச் செய்து வந்து நைவேத்தியங்கள் வைத்து புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் புஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.
     
  4. உலகத்திற்கே சக்தியாக விளங்கும் பார்வதி தேவி கடைப்பிடித்த விரதமிது. இந்த சதுர்த்தி புஜையை செய்தான பார்வதி தேவி ஈசுவரனை கணவராக அடைந்தார்.
     
  5. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் ஆதிசேஷன் தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.