அந்தமான் கடல் பகுதியில் காணப்படுகி ccன்ற குறைந்த தாழமுக்க நிலையானது படிப்படியாக வளர்ச்சி அடையும்
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காணப்படுகி ccன்ற குறைந்த தாழமுக்க நிலையானது படிப்படியாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணத்தினால் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்காரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் 17ஆம் திகதி முதல் மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
இந்த மழை கொண்ட காலநிலையானது சில நாட்களுக்கு தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
(பெரும்பாலும் 21ஆம் திகதி வரை).
இதேபோன்று இந்த குறைந்த தாழமுக்க நிலை காரணமாக வடமகாணங்களான முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி முதலும்
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் சில பகுதிகளில் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கமும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது.
இன்றுள்ள வானிலை அமைப்பின்படி கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கும்
வட மாகாணத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கும் மழையும் பெரும்பாலும் தொடர்ச்சியாக எதிர்வரும் 22ஆம் திகதி வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது(இன்றுள்ள வானிலை அமைப்பின்படி).
அதுமட்டுமல்லாது அடுத்த மாதம் பொங்கல் வரை வடகிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு நன்றாகவே காணப்படுகின்றது.



