13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது - நாமல் ராஜபக்ஸ

Kanimoli
1 year ago
 13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது -  நாமல் ராஜபக்ஸ

  நாட்டில் தேர்தலைக் காலந்தாழ்த்த முயற்சித்தவர்கள் தற்போது 13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியதென பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மின்சாரம், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறைத்திருந்தாலும், போராட்டம் ஊடாக அவரை விரட்டியடித்தார்கள் எனவும் நாமல் தெரிவித்தார்.

நாட்டில் தேர்தல் நிச்சியமாக நடத்தப்பட வேண்டும் என தெரிவித்த அவர், அன்று மாகாணசபைத் தேர்தலைக் காலந்தாழ்த்துவதற்காக செயற்பட்டவர்கள் இன்று அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது எனவும் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டம், தேர்தல்கள் தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இருந்தால் கடந்த 2, 3 வருடங்களுக்கு முன்பு தேர்தலைக் காலந்தாழ்த்தி இருக்க மாட்டார்கள் எனவும் நாமல் ராஜபக்ச சாடினார்.

நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். என தெரிவித்த நாமல், அது தொடர்பான நீண்டக் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!