விலங்குகளை வேட்டையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி 23 வயதுடைய இளைஞன் பலி
#Death
Prasu
2 years ago
வவுனியா பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மின்சாரம் தாக்கி 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் மின் தாக்கியமையினாலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.



