பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் 38 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்
Prasu
1 year ago
இலங்கையில் உள்ள 38 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
வேறு நாடுகளில் உள்ள சிவில் ஏவியேஷன் நிறுவனங்கள் வழங்கும் அதிக சம்பளம் மற்றும் வசதிகள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலைமை காரணமாக இலங்கையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பல விமானிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.