போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்
#India
#Tamil Nadu
#Lanka4
#Vijay
#ChiefMinister
#Polio
#Camp
#L4
Prasu
1 hour ago
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்று வருகிறது. முகாமை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
போலியோவை ஒழிக்க பல்வேறு உலக நாடுகளின் முயற்சியால் இந்த தொற்றுநோய் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா போலியோ தொற்று நோய் இல்லாத நாடாக உருவாகியுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே