வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

Prabha Praneetha
1 year ago
வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி என்ற வகையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று முதல் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தியுள்ளார்.

அவர் 2020 ஜூலை 15 அன்று இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டார், அட்மிரல் 3-நட்சத்திர தரத்திற்கு பதவி உயர்வு பெற்றார்.

அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 4 நட்சத்திர தரத்திற்கு பதவி உயர்வு பெற்றதையடுத்து, கடற்படைத் தலைமையகத்திற்கு இன்று வருகை தந்தார், அங்கு கடற்படை மரபுகளுக்கு ஏற்ப அவருக்கு மரியாதை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது.

அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன 1985 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் 13 வது உள்வாங்கலின் அதிகாரி கேடட்டாக இலங்கை கடற்படையில் இணைந்தார்.

கடற்படை மற்றும் தாய்நாட்டிற்கு குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றிய அவர், 37 ஆண்டுகால தனது புகழ்பெற்ற கடற்படை பணிக்கு நாளை விடைபெறுகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!