பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் -08

#spiritual #God #Pillaiyar
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் -08
  1. வன்னி மரத்தடி விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப்பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்தால் மாங்கல்ய தோஷம் அகன்று திருமணத்தடை நீங்கும்.
     
  2. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் ஆலயம் சென்று வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களாலான வஸ்திரத்தை அணிவித்து மூன்று வித நைதேத்தியங்களை இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகம் அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் இடமாற்றம் வந்து சேரும்.
     
  3. கேது திசை நடக்கையில் அதற்குரிய தெய்வமாக விளங்கும் விநாயகப்பெருமானை வழிபட்டு வந்தால் துன்பம் விலகும். 
     
  4. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்ததை பெறலாம்.
     
  5. வல்லபை கணபதியை சுவாமிமலை முருகன் சந்நிதானத்தில் காணலாம். இங்கு குழந்தைப்பேறு வேண்டி வழிபட்டால் அது நடக்குமாம்.