1,441 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 45,801 சந்தேகநபர்கள் கைது

Prabha Praneetha
3 years ago
1,441 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 45,801 சந்தேகநபர்கள் கைது

இந்த வருடத்தில் இதுவரை போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் தொண்ணூறு ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். 

1,441 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 45,801 சந்தேகநபர்கள் அங்கு கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வருடத்தில் 11,881 கிலோகிராம் கஞ்சா மற்றும் 34,062 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 109 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10,532 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், மேல் மாகாண பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

122 பாடசாலைகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4