இலங்கை கடலில் கரையொதுங்கிய மர்ம கப்பலால் பரபரப்பு!
Nila
1 year ago
வடமராட்சி மருதங்கேணி கடற்பரப்பில் சுமார் 100 மைல் தூரத்தில் மர்மப் படகொன்று மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது இது தொடர்பில் கடற் படையினருக்கு அறிக்கப்பட்டதை அடுத்து கடற்படை குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
குறித்த கப்பலானது வேறொரு நாட்டிற்கு சொந்தமானது எனவும் கப்பலானது உடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது அதேவேளை குறித்த கப்பலை காங்கேசன்துறைக்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது குறித்த கப்பலில் உள்ள பயணிகளின் நிலை தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.