கடன் அனுமதிக்கு முன் மின்கட்டணத்தை அதிகரித்து, கடன் வழங்கும் நாடுகளில் இருந்து எழுத்துப்பூர்வ சான்றிதழ்களை கொண்டு வாருங்கள்: IMF தகவல்..

Prathees
1 year ago
கடன் அனுமதிக்கு முன் மின்கட்டணத்தை அதிகரித்து,  கடன் வழங்கும் நாடுகளில் இருந்து எழுத்துப்பூர்வ சான்றிதழ்களை கொண்டு வாருங்கள்: IMF தகவல்..

கடனை மறுசீரமைப்பதற்கு ஆதரவளிப்பதாக இலங்கையின் கடனாளி நாடுகள் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் வரை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன்களை அங்கீகரிக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீனா, இந்தியா, ஜப்பான், பிரதான கடன் வழங்கும் நாடுகள் மற்றும் அமெரிக்கா மற்றும் பாரிஸ் கிளப்பில் உள்ள ஏனைய நாடுகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் சுயாதீன நிறுவனமாக மாற்ற வேண்டும் எனவும், மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

அரசாங்கம் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றி, சர்வதேச நாணய நிதியம் இரண்டாவது வாரியக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடும் ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு முன்னர் கடன் வழங்கும் நாடுகளின் பரிந்துரைகளைப் பெற்றால், முன்மொழியப்பட்ட கடன் தொகையின் முதல் பகுதி இலங்கையை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!