அதிக வட்டி விகிதங்களால் வங்கி முறைக்கு ஆபத்து!
Prathees
1 year ago
அதிக வட்டி விகிதங்கள் காரணமாக வங்கி முறைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அடகு வைக்கப்பட்ட தங்கப் பொருட்களை வெறுமையாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதன் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இது வங்கி அமைப்புக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
வங்கி அமைப்பில் ஒரு வங்கி கூட வீழ்ச்சியடைந்து வருவது இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பயனளிக்காது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.