தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை - நீதி அமைச்சர்

Reha
3 years ago
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை - நீதி அமைச்சர்

தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமான அமைப்பாகும், தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரமும் அதற்கு உண்டு என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்  அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன் செயல்பாட்டில் அரசாங்கம்  தலையிடாது என்று உறுதியளித்தார்.

இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (20) கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி  மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4