அரசாங்கம் மீண்டும் SOFA மற்றும் MCC உடன்படிக்கைகளை கொண்டுவர முயற்சி: பேராசிரியர் திஸ்ஸ குற்றச்சாட்டு

Prathees
3 years ago
அரசாங்கம் மீண்டும் SOFA மற்றும் MCC உடன்படிக்கைகளை கொண்டுவர முயற்சி: பேராசிரியர் திஸ்ஸ குற்றச்சாட்டு

மிகவும் ஆபத்தான சோபா மற்றும் மீ. சி. சி. இந்த இரண்டு உடன்படிக்கைகளையும் மீண்டும் நடைமுறைப்படுத்த தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சியின் 88ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் நேற்று (20) கலந்து கொண்டு உரையாற்றும் போதே  பேராசிரியர் திஸ்ஸ விதாரண இதனைத் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் தேர்தலில் தோற்று தோல்வியடைந்ததாகவும் தெரிவித்த திரு.விதாரண, இந்த ஒப்பந்தங்களின் மூலம் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் கதவுகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தில் அமெரிக்கா தனது இராணுவ முகாமுக்கு பயன்படுத்திய மொரிஷியஸ் தீவில் உள்ள முகாம் தளத்தை ஒப்படைக்க சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்ததன் பின்னணியில் இலங்கையில் தனது தளத்தை நிறுவ அமெரிக்கா முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4