நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை: நாட்டை விட்டு வெளியேறும் பூச்சியியல் உத்தியோகத்தர்கள்

Prathees
1 year ago
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை:  நாட்டை விட்டு வெளியேறும் பூச்சியியல் உத்தியோகத்தர்கள்

பூச்சியியல் ஆராய்ச்சிக்கு தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதம் காலியாக இருப்பதாக சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் சங்கம் கூறுகிறது.

தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் தற்போதுள்ள பூச்சியியல் உத்தியோகத்தர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களப்பணிக்காக வரும் பூச்சியியல் உத்தியோகத்தர்களுக்கு சில நபர்களினால் இடையூறுகள் ஏற்படுவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக அண்மைய நாட்களில் செய்திகள் வெளியாகின.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!