சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமையவே மின் கட்டணத்தை அதிகரித்துள்ளோம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

#SriLanka #IMF #Power #power cuts #Electricity Bill
Mayoorikka
3 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமையவே மின் கட்டணத்தை அதிகரித்துள்ளோம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திடம் இலங்கை பொருளாதாரத்திற்கு மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை கோரியுள்ளது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த சர்வதேச நிதியங்கள் விதித்துள்ள இந்த நிபந்தனைகளின் காரணமாகவே இன்று மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட வரியில்லா வர்த்தக வளாகத்தை நேற்று (03) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிமல் சிறிபால டி சில்வாமேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியம் நமது பொருளாதாரத்தை மறுசீரமைக்க ஒரு திட்டத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறது. மானியங்கள் சாத்தியமில்லை என்ற நிபந்தனைகளுக்கு நாம் அடிபணிய வேண்டும். அதற்கு நாங்கள் அடிபணியாவிட்டால் அல்லது அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தேவையான கடன் தொகை கிடைக்காது. சர்வதேச ஆதரவும் கிடைக்காது.

இன்று மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். அது தான் காரணம். இதை விரும்பி செய்யவில்லை.அரசியல்வாதிகள் முடிந்தால் பிடிக்கும். யாருக்கு பிடிக்காது. ஆனால் அப்படி கொடுக்க முடியாது. அப்படி கொடுத்தால் சர்வதேசத்திற்கு இந்த உதவி கிடைக்காது. இந்த கடனை நாம் மறுசீரமைக்க வேண்டியதில்லை.”

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4