இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டுமென கோரிக்கை

#karu jayasurya
Prathees
1 year ago
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டுமென கோரிக்கை

இலங்கையில் உருவாகியுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மேலதிகமாக, ஒரு நாடாக இன்று பாரிய சுற்றாடல் நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

2019 ஆம் ஆண்டு திரு.கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்கும் போது 29 வீதமாக இருந்த நாட்டின் வனம் இன்று 16 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தினமும் ஒரு யானையாவது இறக்கிறது. 2022ஆம் ஆண்டில் மட்டும் 395 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பாரிய விபத்தை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!