மின் கட்டண விவகாரம்: எந்த அமைச்சருக்கும் அஞ்சப் போவதில்லை! ஜனாதிபதியை சந்திக்கவும் தயார்
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Electricity Bill
Mayoorikka
2 years ago

அமைச்சரவைப் பத்திரங்கள் ஒன்றல்ல பத்து வந்தாலும் மின்சாரக் கட்டணத்தை எந்த வகையிலும் அதிகரிக்க ஆணையம் அனுமதி வழங்காது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமன்றி எந்தவொரு நபருடனும் இது தொடர்பில் கலந்துரையாட பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மின்கட்டணத்தை உயர்த்துவது சட்டவிரோதமானது என்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மின்சார சபை பொது மேலாளரும் மற்றுமொரு பொறியாளரும் கட்டணத்தை திருத்தியமைக்குமாறு அமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். அமைச்சின் செயலாளரும் குழப்பத்தில் உள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும், தாம் எந்த அமைச்சருக்கும் அஞ்சப் போவதில்லை என்றும், ஆணையம் எப்போதும் சுதந்திரமாகச் செயல்படும் என்றும் கூறினார்.



