பிரண்டைச்செடி உங்களிடம் இருந்தால் இதனை செய்து பாருங்கள். உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் நிகழும்.

#ஆன்மீகம் #மூலிகை #கடவுள் #பயன்பாடு #தகவல் #spiritual #herbs #God
பிரண்டைச்செடி உங்களிடம் இருந்தால் இதனை செய்து பாருங்கள். உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் நிகழும்.

பெரும்பாலும் நிறைய பேர் இந்த பிரண்டை செடியை வீட்டில் வைத்து வளர்ப்பார்கள். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

பிரண்டையை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு பிரண்டு இருந்தால் போதும். நறுக்கிய இந்த பிரண்டைகளை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் கிழக்கு பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் முன்பு ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அதன் பக்கத்தில் இந்த பிரண்டையை வைத்துவிட்டு, அந்த மண் அகல் விளக்கை பார்த்தபடி ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்ல வேண்டும்.

சிவாய நம, நம சிவாய, சிவ சிவ, அல்லது வெறும் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்தாலும் அது உங்களுடைய சகோதரியும். அல்லது உங்களுக்கு வேறு ஏதாவது இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும், அந்த இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லி மந்திரத்தை உச்சரிக்கலாம்.

வாரத்தில் இரண்டு நாள் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்யலாம். முதல் நாள் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறீர்களோ தொடர்ந்து அந்த மந்திரத்தை தான் மீண்டும் மீண்டும் உச்சரித்து வர வேண்டும். தொடர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் மேலும் மேலும் வெற்றி தான் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய உடம்பிலும் மனதிலும் ஏற்படக்கூடிய மாற்றத்தை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத நல்லது எல்லாம் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கும்.