சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழப்பு
#SriLanka
#Refugee
#Death
#Mullaitivu
Prasu
2 years ago
சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர் பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.
இளைஞனின் சட்டவிரோத பயணமுகவர் இந்த தகவலை குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார் என்று அறியவருகிறது.
முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (33) என்ற இளைஞனே உயிரிழந்தார் என்று கூறப்படுகின்றது.
எனினும், இளைஞனின் கதி குறித்து அறிய முடியாமல் குடும்பத்தினர் திண்டாடி வருகின்றனர்



