ஆடையுடன் சிறுநீர் கழித்த ஜனாதிபதி: கைது செய்யப்பட்ட ஆறு ஊடகவியலாளர்கள்
#world_news
#President
#Arrest
Mayoorikka
2 years ago

தெற்கு சூடான் ஜனாதிபதி ‘ சல்வா கீர்‘, அரச நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது தனது நீளக்காற்சட்டையில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், குறித்த வீடியோவைப் பகிர்ந்ததாகக் கூறி குறித்த நிகழ்வில் பங்கேற்ற 6 ஊடகவியலாளர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் .



