புகையிரத அட்டவணை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
#Train
#SriLanka
Prathees
1 year ago
பெப்ரவரி மாதம் முதல் புதிய புகையிரத அட்டவணை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு கடந்த 5ஆம் திகதி அமைச்சர் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள திறன்களுக்கு ஏற்ப புதிய ரயில் அட்டவணை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், "எல்லா-ஒடிசி" போன்ற சுற்றுலா தலங்களைக் கொண்ட நீண்ட தூர ரயில் சேவைகளுக்கான டிக்கெட்டுகளை 100% ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் விவாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர்,ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படவில்லை என தெரிவித்தார்.