மறு அறிவிப்பு வரும் வரை 42 ரயில்கள் ரத்து
#Train
Prathees
1 year ago
நாளை முதல் மறு அறிவித்தல் வரை 42 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அலுவலக ரயில்களுக்கு போதிய பணியாளர்கள் இல்லாததாலும், வழக்கமான பயண நேரங்களாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
பிரதான பாதையில் 20 ரயில் பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் 04 பயணங்களும், கரையோரப் பாதையில் 16 ரயில் பயணங்களும், களனிவெளி மார்க்கத்தில் 2 ரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.