அதிக நெருக்கம் வேண்டாம். - கடக ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள்

#கடகம் #சனிப்பெயர்ச்சி #ராசிபலன் #Astrology #Rasipalan
Nila
1 year ago
அதிக நெருக்கம் வேண்டாம். - கடக ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள்

இந்த ஆண்டு 17.01.2023 அன்று இடம்பெறும் சனிப்பெயர்ச்சியில் கடக ராசி நேயர்களுக்கு அஷ்டமத்துச் சனியாக வருகிறார் சனி பகவான்.

ஆகவே அடுத்த இரண்டரை வருட காலம் சற்றுக் கவனமாகச் செயல்பட வேண்டியது அவசியம். உறவுகள், நண்பர்கள், புதிதாக அறிமுகம் ஆகும் அன்பர்களிடம் கவனமாகப் பழுகுங்கள்; அதிக நெருக்கம் வேண்டாம்.

அதேபோல் கடன் கொடுப்பது, வாங்குவது, புதிய வியாபாரத் தொடக்கம் போன்றவற்றில் அவசரம் கூடாது; நிதானத்துடனும் பெரியோர்களின் ஆலோசனைப்படியும் செயல்படவேண்டும்.

புதிதாக திருமணமான கடக ராசிக்காரர்கள், இந்த வருடத்தில் திருமணம் செய்யவுள்ள அன்பர்கள், சனி பகவானுக்குப் பிரீதி செய்வதால், நல்ல பலன்கள் கைகூடும்.

மாசி மாதத்தில் திருமணம் செய்பவர்கள், சூரியன் சனியுடன் இருக்கும் காலத்தில் பரிகாரங்கள் செய்துவிட்டு திருமணங் கள் செய்யலாம். அதேநேரம், சில யோகங்களையும் கொடுப்பார் சனி பகவான். கலைஞர்கள், வேலை தேடும் அன்பர்கள், வாகனம் வாங்கும் எண்ணத் தில் உள்ளவர்களுக்குச் சாதகமான பலன்கள் ஏற்படும்.

வியாபாரம், வேலை, சொந்தத் தொழில் ஆகியவை சிறப்பாகவே இருக்கும். நெருங்கிய உறவுகள் இடையே சிறுசிறு சண்டைகள் வரலாம்; பெரிது படுத்தவேண்டாம்.

பெண்களுக்கு: எண்ணங்களிலும் செயல்களிலும் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவது நபரின் தலையீட்டால் குழப்பங்கள் வர வாய்ப்புகள் உண்டு. சகோதர, சகோதரி களிடம் அன்பாக இருங்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிகமான பொறுப்புகள் வரலாம். அலைச்சலும் அதிகம் இருக்கும்.

மாணவர்களுக்கு: படிப்பில் நல்ல முன்னேற்றம் வரும். சோம்பேறித் தனத்தை சற்று ஒத்திவைத்தால், எண்ணங்கள் நிறைவேறும். விளையாட்டுத் துறையில் சாதனை செய்யலாம். ஆசிரியர்களிடத்தில் நட்பு வைத்துக் கொள்வது நல்லது. வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டால், தடைகள் நிவர்த்தி ஆகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: வேலை மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படும். வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வங்கி ஊழியர்கள் பண விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். அரசுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம்.

வியாபாரிகளுக்கு: நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய வியாபார யோசனைகளைச் செயல்டுத்தலாம். சிறுதொழில் செய்பவர்களுக்கு நல்ல காலம் இது. எண்ணெய்த் தாவரங்கள், ஜவுளித் தொழில், கட்டடத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல காலம் இது.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் 13 நபர்களுக்கு அன்னதானம் செய்யவும். குச்சனூர் சென்று சனி பகவானைத் தரிசனம் செய்வது நல்லது. சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்லது.