விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது 'ஓம் அநீஸ்வராய நம' என குறிப்பிடுவது ஏன்? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.

#பிள்ளையார் #விநாயகர் #கணபதி #ஐங்கரன் #ஏகதந்தன் #spiritual #God #Pillaiyar #today #information
விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது 'ஓம் அநீஸ்வராய நம'  என குறிப்பிடுவது ஏன்? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
  • சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமானோடு திருவையாறு வந்தபோது காவிரி வெள்ளம் கரைபுரண்டோடியது. இதற்கு பாலம் அமைத்துதவியவர் விநாயகப்பெருமானேயாவார்.
     
  • விநாயகருடன் சேர்ந்து முனீஸ்வரரும் ஐக்கியமாகி இருப்பது எங்குமில்லா சிறப்பு. அதனால் இவரை, ’சொற்கேட்ட முனியய்யா..’ என்றும் அழைக்கிறார்கள்.
     
  • ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையாரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும்.
     
  • விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது 'ஓம் அநீஸ்வராய நம' என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை என்பது பொருளாகும்.
     
  • பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும்.