பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் சந்திப்பை மேற்கொண்ட ஜனாதிபதி

#Ranil wickremesinghe #SriLanka #Sri Lanka President #Electricity Bill #Lanka4
Kanimoli
1 year ago
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் சந்திப்பை மேற்கொண்ட ஜனாதிபதி

 ரணில் விக்ரமசிங்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையுடன், கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலுக்காக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு அழைப்பு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில், இன்று பிற்பகல் 2 மணிக்கு, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, அதன் உறுப்பினர்களை அவசர கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், நான்கு பேர் கொண்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையில், ஏனைய மூவரும் ஜனாதிபதியின் அழைப்பிற்கமைய, குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!