கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல்

#Election
Prathees
1 year ago
கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல்

இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கிய அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

காலை 10 மணிக்கு கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை தெளிவாக அறிந்து கொள்வதற்காக இந்த கலந்துரையாடலில் தமது கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக சமகி ஜனபலவேகவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் தமது கட்சியும் இணைந்து கொள்ளவுள்ளதாக சுதந்திர மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த 05ஆம் திகதி முதல் ஆரம்பமானது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!