மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

#Death #Police
Prathees
3 years ago
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நானுஓயா தோட்டத்திற்கு அண்மித்த பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பத்தன மவுண்ட்வெர்னன் வத்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சடலத்தின் அருகில் பணப்பை ஒன்றும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4