சிறையில் உள்ள கணவருக்கு போதைப்பொருள் கொண்டுசென்ற மனைவி விளக்கமறியலில்

#SriLanka #drugs #Women #Arrest #sri lanka tamil news #Lanka4
Nila
3 years ago
சிறையில் உள்ள கணவருக்கு போதைப்பொருள் கொண்டுசென்ற மனைவி விளக்கமறியலில்

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு அவரது மனைவி, டெனிம் காற்சட்டையின் இடுப்பு பட்டியில் மறைத்து கொண்டு சென்ற  சுமார் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று (01) கைப்பற்றியதாக சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகமான சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்  சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களால்  சோதனையிட்டபோதே காற்சட்டையின் பேண்ட் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிராம் 48 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

 இதனையடுத்து குறித்த பெண்ணையும் போதைப்பொருளையும் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும்  ஏகநாயக்க தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4