எஸ்.பி.களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம் -டி.ஜி.பி. திடீர் உத்தரவு

Mani
1 year ago
எஸ்.பி.களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம் -டி.ஜி.பி. திடீர் உத்தரவு

 டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து வழக்கு பதிவு செய்ய எஸ்.பி.களின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டாம் என இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவு இட்டுள்ளார்.

கடத்தல் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையான எஃப். ஐ. ஆர் பதிவு செய்ய எஸ்.பி.களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம்.அது தேவையும் இல்லை.பதற்றமான நியாயமான மற்றும் முக்கிய விவகாரம் தொடர்பாக தேவைக்கு தகுந்தவாறு சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரே வழக்கு பதிந்து தகுந்த நடவடிக்கை அதற்கேற்றது போல் எடுத்துக் கொள்ளலாம்.

இதற்காக எஸ்.பி. உட்பட மேல் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.