நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி அரசாங்கம் மீது பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள்!

#world_news #Death #Earthquake #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி அரசாங்கம்  மீது பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள்!

துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அரசாங்கம் சில சிக்கல்களை எதிர்கொண்டதாக ஜனாதிபதிரெசெப் தையிப் அடர்கோடன் (Recep Tayyip Adergoden) தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட விமர்சகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது அமைந்துள்ளது. ஆனால் நிலைமை முற்றாக கட்டுக்குள் இருப்பதாக ஜனாதிபதி கூறுகிறார்.

அவசர சேவைகளின் பதில் மிகவும் மெதுவாக இருப்பதாகவும், அரசாங்கத்தின் தயார்நிலை பலவீனமாக இருப்பதாகவும் விமர்சகர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்த அனர்த்தத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

ஆனால் இவ்வாறான அனர்த்த காலப்பகுதியில் ஒற்றுமை தேவை என நாட்டின் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் நலன்களுக்காக அவதூறு செய்யக் கூடாது என்கிறார்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 12,000 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக 3.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு, இரு நாடுகளின் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4