பிரதமர் மும்பையில் நடைபெற்ற விழாவில் 2 வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Mani
1 year ago
பிரதமர் மும்பையில் நடைபெற்ற விழாவில் 2 வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

8 அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் நாடு முழுவதும் ஓடுகிறது. இதில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரெயில் சேவை தலைநகர் டெல்லி-வாரணாசி தொடங்கியது. 

இந்நிலையில் புதிதாக மும்பையில் 2 வந்தே பாரத் ரெயில்களை இன்று பிரதமர் மோடி விழாவை  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரெயில்கள் மராட்டிய மாநிலத்துக்குள்ளே இயக்கப்படுகிறது. அது மாநில தலைநகர் மும்பையில் இருந்து புனித ஸ்தலமாக கருதப்படும் ஷீரடிக்கும்(339கி.மீ), மும்பையில் இருந்து சோலாப்பூருக்கும்(452கி.மீ) இயக்கப்பட உள்ளது.