சுவிஸ் ஆர்காவ் மாகாணத்தில்இலங்கை தமிழ் பெண் வெட்டிக்கொலை திடீர் பரபரப்பு

#swissnews #Tamilnews #sri lanka tamil news #Death #Arrest #Lanka4
Kanimoli
1 year ago
சுவிஸ் ஆர்காவ் மாகாணத்தில்இலங்கை தமிழ் பெண் வெட்டிக்கொலை திடீர் பரபரப்பு

சுவிஸ் ஆர்காவ் மாகாணத்தில் ரத்தக்களரி – இலங்கை தமிழ் பெண் வெட்டிக்கொலை.! ஆர்காவ் மாகாத்தில் இன்று பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறிய உணவகம் ஒன்றை நடாத்தி வரும் பெண் ஒருவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் கொலையுண்டு கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :- இன்று புதன்கிழமை காலை ஆர்காவ் மாகாணம் ருப்பர்ஸ்வில்லில் 47 வயதுடைய பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

ருப்பர்ஸ்வில் டோர்ஃப்ஸ்ட்ராஸ்ஸில் இவர்கள் ஒரு சிற்றுண்டி பார் நடாத்தி வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 8.40 மணிக்கு போலீசாருக்கு கிடைத்த அவசர தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு ஆர்காவ் போலீசார் விரைந்துள்ளார்கள்.

பாரில் பலத்த காயம் அடைந்த பெண்ணை கண்டு உடனடியாக முதலுதவி அளித்தனர். மீட்புச் சேவையானது எவ்வளவு முயற்சி செய்தும் குறித்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.

47 வயதுடைய குறித்த பெண் இலங்கை தமிழர் எனவும் அவரது கணவனாலையே குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதும் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கணவனாலையே கொல்லப்பட்டு அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தார்கள். சந்தேகத்தின் பேரில் 57 வயதான கணவரை குற்றம் நடந்த இடத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


குறித்த இலங்கை தமிழர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடாத்தியபோது இருவரும் அந்நியோன்யமாக பழக கூடியவர்கள் எனவும் தங்களது கடைக்கு வருபவர்களை அன்போடு உபசரிப்பவர்கள் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த கோரச்சம்பவத்திற்கான சரியான காரணம் என்வென்பது தொடர்பாக ஆர்காவ் மாகாண போலீசார் தீவிர விசாரணையை முன்னெடுத்தள்ளார்கள்.